Friday 4 March 2011

அழகூரில் பூத்தவளே - திருமலை



 இசை : வித்யாசாகர்  பாடல் : பா.விஜய்
 குரல்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம் - சுஜாதா  வருடம் : 2003

அழகூரில் பூத்தவளே எனை அடியோடு சாய்த்தவளே
மழையூரின் சாரலிலே எனை மார்போடு சேர்த்தவளே
உனை அள்ளித்தானே உயிர்நூலில் கோர்ப்பேன்
உயிர்நூலில் கோர்த்து உதிராமல் காப்பேன்
( அழகூரில் பூத்தவளே...

நீ உடுத்தி போட்ட உடை என் மனதை மேயுதடா
நீ சுருட்டி போட்ட முடி மோதிரமாய் ஆகுமடி
இமையாலே நீ கிறுக்க இதழாலே நான் அழைக்க
கூச்சமிங்கே கூச்சப்பட்டுப் போகிறதே
சடையாலே நீ இழுக்க இடைமேலே நான் வழுக்க
காய்ச்சலுக்கும் காய்ச்சல் வந்து மேய்கிறதே
என்னை திரியாக்கி உன்னில் விளக்கேற்றி எந்நாளும் காத்திருப்போம்

( அழகூரில் பூத்தவளே...

நீ முறிக்கும் சோம்பலிலே நான் ஓடிஞ்சி சாய்ந்திடுவேன்
நீ இழுக்கும் மூச்சுக்குள்ளே நான் இறங்கி தூங்கிடுவேன்
குறிலாக நானிருக்க நெடிலாக நீ வளர்க்க
சென்னைத் தமிழ் சங்கத் தமிழ் ஆனதடி
அறியாமல் நானிருக்க அழகாக நீ திறக்க
காதல்மழை ஆயுள்வரை தூறுமடா
என்னை மறந்தாலும் உன்னை மறவாத நெஞ்சோடு நானிருப்பேன்

அன்பூரில் பூத்தவனே எனை அடியோடு சாய்த்தவனே...

No comments: