Tuesday 8 March 2011

ஆலோலம் பாடும் தென்றலே - சிறையில் பூத்த சின்னமலர்



 இசை : இளையராஜா  பாடல் : கவிஞர் வாலி
 குரல்கள் : மனோ - ஜானகி  வருடம் : 1990

ஆலோலம் பாடும் தென்றலே...
ஆகாயம் தேடும் திங்களே...
வட்ட வட்ட பொட்டுவைத்து
வண்ண வண்ண பூமுடிக்கவா...
சின்ன சின்ன கன்னங்களில்
உண்ணுகின்ற தேனெடுத்து வா...

( ஆலோலம் பாடும்...

உச்சிவெயில் சூடுபட்டு வங்கக்கடல் காய்வதில்லை
வீசும்போல் காற்றடித்து வெள்ளிமலை சாய்வதில்லை
சந்திரனைப் போல இங்கு சூரியனும் தேய்வதில்லை
மானிடரைப் போல இங்கு காதல் என்றும் மாய்வதில்லை
நேசமனம் சேர்ந்திருக்க காசுபணம் கேட்குமா
பேசுகின்ற பேதமெல்லாம் பாசங்களைத் தாக்குமா
வாழலாம் கூடவா... வாழலாம் கூடவா...
நாளெலாம் நான் சூடும் பூவே...


( ஆலோலம் பாடும்...

உன்னையொரு நாள்மறந்து என்மனது வாழ்ந்ததில்லை
உச்சரிக்கும் வார்த்தையெல்லாம் உன்னையன்றி வேறு இல்லை
பொன்னையள்ளி நான் கொடுக்க என்னிடத்தில் ஏதுமில்லை
என்னையள்ளி நான் கொடுப்பேன் உன்னுடைய கைகளிலே
கண்ணிரண்டில் காதலெனும் கோட்டைகட்டி வாழ்கிறேன்
ஊரறிய மாலையிட்டு உன்மடியில் சேர்கிறேன்
காலமே கூடலாம்... காலமே கூடலாம்...
மார்பிலே நான் மஞ்சம் போட...

( ஆலோலம் பாடும்...

No comments: