இசை : ஜி.வி.பிரகாஷ் | பாடல் : நா.முத்துகுமார் |
குரல்கள் : சித்ரா | வருடம் : 2007 |
விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே
உயிரிலே நினைவுகள் தளும்புதே
கன்னங்களில் கண்ணீர் வந்து உன் பெயரை எழுதுதே
முத்தமிட்ட உதடுகள் உலருதே
நான் என்னைக் காணாமல் தினம் உன்னில் தேடினேன்
என் கண்ணீர்த்துளியில் நமக்காக ஒரு மாலை சூடினேன்
( விழியிலே என் விழியிலே...
இமைகளிலே கனவுகளை விதைத்தேன்
ரகசியமாய் நீரூற்றி வளர்த்தேனே
இங்கு வெறுங்காற்றிலே நான் விரல் நீட்டினேன்
உன் கையோடு கை சேரத்தான்
உன் உருவம் இல்லை என் விரலும் இல்லை
இனி என் காதல் தொலைதூரம்தான்
நான் சாம்பல் ஆனாலும் என் காதல் வாழுமே
அந்த சாம்பல் மீதும் உனக்காக சில பூக்கள் பூக்குமே
( விழியிலே என் விழியிலே...
உள்ளிருக்கும் இதயத்துக்கு எதைப் புரியும்
யாருக்குத்தான் உன் காதல் விடைதெரியும்
காதல் சிரகானது இன்று சருகானது
என் உள்நெஞ்சம் உடைகின்றது
உன் பாதை எது என் பயணம் அது
பனித்திரையொன்று மறைக்கின்றது
ஏன் இந்த சாபங்கள் நான் பாவம் இல்லையா
விதி கண்ணாமூச்சி விளையாட நான் காதல் பொம்மையா...
( விழியிலே என் விழியிலே...
No comments:
Post a Comment