Tuesday 8 March 2011

மணிக்குயில் இசைக்குதடி - தங்கமனசுக்காரன்



 இசை : இளையராஜா  பாடல் : பிறைசூடன்
 குரல்கள் : மனோ  வருடம் : 1992

மணிக்குயில் இசைக்குதடி... மனமதில் மயங்குதடி ...
மணிக்குயில் இசைக்குதடி... மனமதில் மயங்குதடி ...
சிறகுகள் விரிந்ததடி... இளங்குருவிகள் பறந்ததடி...
அடி மானே... மயங்குவதேனோ
உனைத்தானே... உருகுவதேனோ
இளங்காற்றே கைகள் வீசி வா
இதம் தேடும் கதைகள் பேச வா
இளங்காற்றே கைகள் வீசி வா
இதம் தேடும் கதைகள் பேச வா

( மணிக்குயில் இசைக்குதடி...

கட்டழகு தோட்டம் கண்டால் கம்பன் மகன் நானம்மா
சிட்டுவிழி சேதி சொன்னால் அந்த சுகம் தேனம்மா
பட்டம்விட்டு வாழும் வாழ்க்கை இன்று வந்து கூடுமோ
சட்டதிட்டம் ஏதுமில்லா பிள்ளைகுணம் ஆகுமோ
ஊர்கோலம் போகும்... கார்கால மேகம்
பூக்கோலம் நாளும்தான்
இளங்காற்றே கைகள் வீசி வா
இதம் தேடும் கதைகள் பேச வா

( மணிக்குயில் இசைக்குதடி...

ஆற்றுநீரில் ஆட்டம் போட்டு ஆடி வந்த நாட்களும்
நேற்று வந்த காற்றுப் போலே நெஞ்சை விட்டு போகுமா
அந்தி வந்து சேர்ந்தபின்னே நாள் முடிந்து போனதா
சந்தனந்தான் காய்ந்த பின்னே வாசமின்றி போனதா
நீராடும் மேகம்... தாலாட்டு கேளு
ஊர்கோலம் என்றும்தான்
இளங்காற்றே கைகள் வீசி வா
இதம் தேடும் கதைகள் பேச வா

( மணிக்குயில் இசைக்குதடி...


1 comment:

Lakshminarayanan C said...

கவிஞர் பிறைசூடன் தந்த தேன் பாடல்